Connect with us

CINEMA

விஜய் அப்பா SAC எங்கிட்ட வந்து கெஞ்சினாரு, அதனால தான் அதை செஞ்சேன்.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் ராதாரவி..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் ராதாரவி. ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு வில்லன் இவர்தான். விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். எம்ஆர் ராதாவின் மகன், நடிகை ராதிகாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சின்னத்தம்பி, இதுநம்ம பூமி, அண்ணாமலை, புலன் விசாரணை, காதலுக்கு மரியாதை போன்ற பல படங்களில் ராதாரவி நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது. திமுகவில் இருந்தவர் பின், அதிமுகவில் இருந்தார். இப்போது பாஜகவில் இருக்கிறார். அடிக்கடி அரசியல் நிலைகளை மாற்றிக்கொள்பவர். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எம்எல்ஏவாகவும் இருந்தார்.

   

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் ராதாரவி கூறியதாவது, நாளைய தீர்ப்பு என்ற படத்தில் விஜய் முதன்முறையாக நடித்தார். ஹீரோவாக அந்த படத்தில் அறிமுகமானார். அப்போது என்னிடம் வந்து, விஜய்க்கு அப்பாவாக நடித்துக்கொடுக்க வேண்டும் என்று விஜய் அப்பா எஸ்ஏசி என்னிடம் கெஞ்சினார். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நீதான் அப்பாவாக நடிக்கணுமுன்னு கீழே உட்கார்ந்துக்கொண்டு கேட்டார். அவர் கேட்டுக்கொண்டதால், அந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தார். அதையெல்லாம் எஸ்ஏசி இப்போது சொல்வதில்லை. ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.

அதற்கு பிறகு எப்படியாவது தன் மகன் விஜயை ஹீரோவாக்க வேண்டும் என்று விஜயகாந்திடம் போய் எஸ்ஏசி கேட்டார். உடனே அவருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த், உடனடயாக நடித்துக்கொண்டுத்தார். ஏனென்றால் எஸ்ஏசி மீது விஜயகாந்துக்கு நிறைய மரியாதை உண்டு. விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. விஜயகாந்த் செய்த அந்த நன்றிக்கு கைமாறாக, விஜயகாந்த் மகன்களை தனது ஒரு படத்தில் முன்னிலைப்படுத்தி நடிக்க வைக்க வேண்டும். எஸ்ஏசி மகன் விஜய் இதை செய்தால் அதுதான் சிறந்த கைமாற இருக்கும் என, நடிகர் ராதாரவி அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top