பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜவின் வாக்கு வங்கியை 3 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்திய மாநிலத் தலைவர் அண்ணாமலையை, கூட்டணி அரசியலுக்காக அக்கட்சியின் தேசிய தலைமை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் மாநிலத் தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் ஆகியோருக்குப் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், பாஜகவில் இருந்து வெளியேறினாலும், அண்ணாமலையின் தனிப்பட்ட தலைமையை ஏற்றுக்கொண்டே தனது அரசியல் பயணத்தைத் தொடரப் போவதாகவும் அமர்பிரசாத் ரெட்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…