பி – பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆரா மாவட்டத்தில் நேற்று ரோடு ஷோ நடைபெற்றது. அதில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார். அப்போது அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் மோதியது. அப்போது அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது . இதனையடுத்து பிரசாந்த் கிஷோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…