ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற பிரதமரின் புதிய திட்டம்… PM வித்யாலக்ஷ்மி திட்டம் பற்றிய முழு விவரங்கள் இதோ…

Spread the love

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் உயர் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கிலும் நாட்டில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி பெற வேண்டும் என்ற கனவை நினைவாக்க மத்திய அரசு பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா எனும் புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வியை எளிதாக பெற முடியும். அதன் முழு விவரங்களை பற்றி இனி காண்போம்.

பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெரும் மாணவர்களுக்கு எந்தவித அதிகப்படியான கட்டணங்கள் இல்லாமல் நிதி நிறுவனங்களில் கடன் உதவி பெற முடியும். ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் அல்லது அதற்கு குறைவான வருமானத்தைக் கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தின் மூலமாக 10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீதம் வட்டி மானியமும் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் தொகைக்கு உத்தரவாதம் வழங்குவதால் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்கும். இதனால் வங்கிகள் மாணவர்களுக்கு எளிதாக கடன்களை வழங்கும். இந்த திட்டத்தை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.

பிரதம மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தின் பலனை பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.vidyalakshmi.co.in/students/ என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் 860 சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படும். மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரியில் NIRF ஒன்றிலிருந்து நூறு வரையில் இருக்க வேண்டும். மாநில அளவில் கல்லூரியின் தரவரிசை 200 வரை என்ற அளவில் இருக்க வேண்டும். இது தவிர அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனம் அரசுக்கு சொந்தமானதாக இருப்பதும் அவசியமானது. இந்த பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் எளிதாக தங்களது உயர்கல்வியை பெற முடியும்.

admin

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 minutes ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

12 minutes ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

28 minutes ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

34 minutes ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

44 minutes ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

1 மணத்தியாலம் ago