ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற பிரதமரின் புதிய திட்டம்… PM வித்யாலக்ஷ்மி திட்டம் பற்றிய முழு விவரங்கள் இதோ…

Spread the love

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் உயர் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கிலும் நாட்டில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி பெற வேண்டும் என்ற கனவை நினைவாக்க மத்திய அரசு பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா எனும் புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வியை எளிதாக பெற முடியும். அதன் முழு விவரங்களை பற்றி இனி காண்போம்.

பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெரும் மாணவர்களுக்கு எந்தவித அதிகப்படியான கட்டணங்கள் இல்லாமல் நிதி நிறுவனங்களில் கடன் உதவி பெற முடியும். ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் அல்லது அதற்கு குறைவான வருமானத்தைக் கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தின் மூலமாக 10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீதம் வட்டி மானியமும் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் தொகைக்கு உத்தரவாதம் வழங்குவதால் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்கும். இதனால் வங்கிகள் மாணவர்களுக்கு எளிதாக கடன்களை வழங்கும். இந்த திட்டத்தை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.

பிரதம மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தின் பலனை பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.vidyalakshmi.co.in/students/ என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் 860 சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படும். மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரியில் NIRF ஒன்றிலிருந்து நூறு வரையில் இருக்க வேண்டும். மாநில அளவில் கல்லூரியின் தரவரிசை 200 வரை என்ற அளவில் இருக்க வேண்டும். இது தவிர அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனம் அரசுக்கு சொந்தமானதாக இருப்பதும் அவசியமானது. இந்த பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் எளிதாக தங்களது உயர்கல்வியை பெற முடியும்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

2 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago