இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் சேமிக்கும் வகையில் வங்கிகள் முதல் தபால் நிலையம் வரை பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக பொன்மகள் சேமிப்பு திட்டம் தபால் நிலையத்தில் செயல்பாட்டில் உள்ள நிலையில் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் சேமித்து வைக்க முடியும். அதனைப் போலவே உங்கள் வீட்டில் உள்ள மகனுக்கும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வைப்பு நிதி திட்டம் ஆண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் படிப்புக்காக பெற்றோர் பணத்தை சேமிக்க உதவுகின்றது.
உங்களின் பத்து வயதுக்கு உட்பட்ட மகனின் பெயரில் பொன்மகன் வைப்பு நிதி கணக்கை நீங்கள் திறக்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை தவணை செலுத்தலாம். ஒரே முறை முதலீடாகவோ அல்லது மாத தவணைகளாகவோ இதில் சேமிக்க முடியும். பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் 9.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.
மேலும் கணக்கு தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பிறகு இதனை காட்டி கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் பொன்மகன் பொது வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தை மற்றொரு அஞ்சலக அலுவலகத்திற்கும் மாற்றலாம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆண் குழந்தையின் பெயரில் இந்த கணக்கை தொடங்கலாம். அந்த ஆண் குழந்தை அரசின் எந்த நிதி உதவியும் பெறாதவராக இருக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு குழந்தையின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். மஞ்சள் அலுவலகத்தில் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்தில் இணைந்து நீங்களும் பயன்பெறலாம்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…