“அடச்சீ.. கோவிலுக்கு வந்த இளம்பெண்ணிடம் போய் இப்படியா?”… போலி சாமியார் செய்தஅசிங்கம் … திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்…!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே வைத்தியம் பார்க்க வந்த இளம்பெண்ணை, போலி சாமியார் ஒருவர் ஆசை வார்த்தை கூறி இரண்டாவது திருமணம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உமையப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் – கவிதா தம்பதியினரின் 19 வயது மகள் காயத்ரி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஆலோசனையின் பேரில், கல்லரப்பட்டி பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் சாமியார் சுப்பிரமணியனிடம் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு பில்லி சூனியம் இருப்பதாகக் கூறி நம்ப வைத்த சாமியார், பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறி சில நாட்கள் தங்கியிருக்கச் செய்துள்ளார்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், பெற்றோர் தங்கள் மகளை மீட்டு வேறு இடத்தில் மருத்துவம் பார்த்து குணப்படுத்தியுள்ளனர். தற்போது செவிலியர் படிப்பு படித்து வந்த காயத்ரி, கடந்த 22-ம் தேதி மருத்துவமனை பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்மமான முறையில் காணாமல் போனார். பதற்றமடைந்த பெற்றோர் தேடிக்கொண்டிருந்த வேளையில், சாமியார் சுப்பிரமணியன் தொலைபேசியில் அழைத்து, “உங்கள் மகளை நான் திருமணம் செய்து கொண்டேன், நாங்கள் திருப்பதி செல்கிறோம்” என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏற்கனவே திருமணமான சாமியாரின் இந்தச் செயல் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்தது.

இது குறித்து சாமியாரின் வீட்டிற்குச் சென்று கேட்டபோது, மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியானது. சாமியாரின் முதல் மனைவியே இந்தத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. தனது கணவர் காயத்ரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டால்தான் தங்கள் குடும்பம் உயிரோடு இருக்கும் என தனக்கு கனவு வந்ததாகவும், அதனால் தான் முன்னின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மகளை மீட்கச் சென்ற காயத்ரியின் பெற்றோரை, சாமியாரின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தாய் கவிதா, ஆலங்காயம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்ற போலி சாமியார் சுப்பிரமணியனிடமிருந்து மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும், இதேபோல் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள போலி சாமியார் சுப்பிரமணியன் மற்றும் அவருக்கு உதவியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

45 minutes ago

“விஜய் அலைக்கு பலியான உதயசூரியன்!”… தி.மு.க-வின் படுதோல்விக்குக் காரணமான அந்த 7 ரகசியங்கள்… ஒரு சிறப்புப் பார்வை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…

55 minutes ago

“கஜானா காலி!”… ‘தளபதி’யின் திட்டங்களால் அரசுக்கு பேராபத்தா?…மே 7-க்கு அப்புறம் கச்சேரி தெரியும்… நிதி நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…

1 மணத்தியாலம் ago

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

2 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

2 மணத்தியாலங்கள் ago