அன்புமணிக்கு செக்… தேதி குறித்த ராமதாஸ்… பாமகவில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழகத்தில் டிசம்பர் 12ஆம் தேதி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பாக நடைபெற உள்ள மாநாடு தமிழகமே குலுங்குகின்ற அளவுக்கு நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அரக்கோணம் அடுத்த நெமிலி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சார்பாக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், குடிப்பழக்கத்துடன் கஞ்சாவும் சேர்ந்து கொண்டு இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து வருகின்றது. மாறி மாறி அனைவரும் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.

முன்பெல்லாம் யாராவது ஒரு வீட்டில் தான் குடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டில் யாராவது ஒருவர் தான் குடிக்காமல் உள்ளனர். அந்த அளவுக்கு குடிப்பழக்கம் நாட்டையும் வீட்டையும் அழித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள 324 ஜாதிகளுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகமே குலுங்கும் அளவுக்கு அமையும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். நாம் செல்லக்கூடிய இடம்தான் எப்போதுமே வெற்றி. ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும்.

கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அடுத்த மாதமே நான் அறிவிப்பேன். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே, ஆக்கல், அழித்தல், காத்தல் மூன்றும் உள்ளது பெண்களுக்கே. பெண்கள் இல்லை என்றால் இந்த உலகமே கிடையாது. பெண் சமூகத்திற்கு எதிராக யாராவது பேசினால் அல்லது செயல்பட்டால் அவர்களை அழிக்கும் சக்தி பெண்களிடம் தான் உள்ளது. தேர்தலில் காசு கொடுப்பார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று உறுதியாக இருக்க வேண்டும். டிசம்பர் 17ஆம் தேதி அன்புமணி அறிவித்துள்ள சிறை நிரப்பம் போராட்டம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் நாங்கள் டிசம்பர் 12 ஆம் தேதி நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் தமிழகமே குலுங்கும் வகையில் அமையும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

2 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

2 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

2 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago