“இனி ரூ.6000 அல்ல ரூ.8000″… விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. பட்ஜெட்டில் வெளியாகப்போகும் அறிவிப்பு….!

Spread the love

மத்திய பட்ஜெட் 2026-ஐ முன்னிட்டு விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பிஎம் கிசான் சம்மான் நிதி  திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வருடாந்திர நிதியுதவியை 6,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அமலில் உள்ள இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய், மூன்று சம தவணைகளாக (தலா ரூ. 2,000) வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் உரம், விதைகள், டீசல் மற்றும் விவசாய உபகரணங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், இந்தத் தொகை போதாது என விவசாய அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. விவசாயிகளின் நிதிச் சுமையைக் குறைக்கவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் இந்த 2,000 ரூபாய் உயர்வு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், இதுவரை கோடிக்கணக்கான விவசாயிகளுக்குப் பேருதவியாக இருந்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் உதவித்தொகை 8,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், அது விவசாயிகளின் சாகுபடிச் செலவுகளுக்குப் கூடுதல் பலமாக அமையும். இந்த அறிவிப்பிற்காக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

2 minutes ago

“பாஜகவை விட்டு ஓடியவர்கள் ஓடோடி வராங்க.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த ‘மாஸ்’ அறிவிப்பு.. அதிரும் தமிழக அரசியல்”..!!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…

3 minutes ago

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…

16 minutes ago

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

24 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

26 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

32 minutes ago