திடீர் திருப்பம்…. அதிமுகவுடன் கூட்டணி இல்லை…. சற்றுமுன் இபிஎஸ்-க்கு செம ஷாக்…!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலங்களாக திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்த தனியரசு, தற்போது திடீரென இபிஎஸ்-ஐ சந்தித்துள்ளது புதிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் தனியரசுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் தனது பழைய கூட்டாளியான அதிமுகவுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட சமூக அமைப்பின் தலைவராக இருக்கும் தனியரசு, அதிமுக கூட்டணியில் இணைவது அக்கட்சிக்கு அந்தப் பிராந்தியத்தில் கூடுதல் பலத்தைத் தரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், வரவிருக்கும் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கான முதற்படியே இது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இன்று காலை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இபிஎஸ்ஐ சந்தித்த கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, அதிமுக கூட்டணியில் இணைந்ததாக தகவல் வெளியானது. இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் விளக்கமளித்துள்ளார். தான் இபிஎஸ்ஐ சந்திக்கவே இல்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ள அவர், அதிமுக கூட்டணியில் இணையவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago