நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 21 தவணை பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தில் 22 ஆவது தவணைத்தொகை 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிப்ரவரி மாதத்தில் பணம் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பணம் கிடைக்குமா என்பதை அறிய பி எம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று Know your status என்ற ஆப்ஷனில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டால் உங்களுக்கு பணம் கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…