இரும்பு கட்டில் உடைந்ததால் தூக்கத்திலேயே உயிரிழந்த தந்தை- மகன்… பழைய கட்டில் வைத்திருந்தால் உடனே இதை செய்யுங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மரணம் எப்போது எப்படி நிகழ்கிறது என்பதே தெரியவில்லை. துர் மரணங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஆபத்தும் நிறைந்திருக்கிறது. பெண் குழந்தைகளை தைரியமாக வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியவில்லை. அதேபோல் ரோட்டிலும் சென்று பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்புவது என்பது கடினமான காரியம் தான்.

இது தவிர உணவில் கலப்படம் ஃபாஸ்ட் புட்டுகள் காற்று மாசு என பலவித நோய்கள் காரணமாக கூட மரணங்கள் ஏற்படுகிறது. ஆனால் இப்படி கூட ஒரு மரணம் நிகழுமா இதையெல்லாம் என்னவென்று சொல்வது என்பது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாரணர் பட்டியில் தந்தை மகன் இரவு நேரத்தில் இரும்பு கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தனர். எதிர்பாரா விதமாக அது பழைய கட்டில் என்பதால் கட்டில் காலில் இருந்த நட்டு ழன்று அந்த கால் உள்பக்கமாக வளைந்ததில் படுத்திருந்த தந்தை மற்றும் மகனின் கழுத்தை நெருக்கி தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற வினோத மரணம் இதுவரை எங்கேயும் நிகழ்ந்ததே இல்லை. சம்பவ டத்திற்கு வந்து விசாரித்த காவல்துறையினர் யார் வீட்டிலும் பழைய கட்டில் இரும்பு கட்டில் போன்றவை வைத்திருந்தால் அதை முறையாக பராமரித்து நட்டு எல்லாம் கரெக்டாக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். மேலும் மிகவும் பழமையான பொருட்களை வீட்டில் வைத்து கொண்டு இருந்தால் அதை மாற்றி விடுங்கள் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார்கள். தந்தை மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

admin

Recent Posts

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

32 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

38 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

42 minutes ago

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

52 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

57 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

60 minutes ago