“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

Spread the love

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நிலத்தை விற்க முயன்றபோதுதான், போலி ஆவணங்கள் மூலம் சையது இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், உரிமையாளர் போலவே ஒருவரை நடிக்க வைத்து (ஆள்மாறாட்டம்), தான செட்டில்மென்ட் பத்திரங்கள் தயாரித்து இந்த நிலம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நில உரிமையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மோசடி கும்பல்கள் பொதுவாக நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாத இடங்கள், உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருக்கும் இடங்கள் அல்லது வயதானவர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்களைத் தான் குறிவைக்கிறார்கள். முதலில் அசல் உரிமையாளரின் பெயரில் போலி ஆதார் கார்டு மற்றும் பட்டாக்களைத் தயாரிக்கும் இவர்கள், அசல் உரிமையாளரின் வயதில் இருக்கும் ஒரு நபரை கூலிக்கு அமர்த்தி ஆவணப் பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பெரும்பாலும் முத்திரைக் கட்டணம் குறைவாக இருக்கும் ‘தான செட்டில்மென்ட்’ முறையைப் பயன்படுத்தி சொத்தை வேறொருவர் பெயருக்கு மாற்றிவிட்டு, பிறகு அதை மூன்றாவது நபருக்கு விற்று பணத்தைச் சுருட்டிவிடுகிறார்கள்.

இத்தகைய நில அபகரிப்புகளைத் தவிர்க்க, நில உரிமையாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆன்லைனில் வில்லங்கச் சான்று (EC) போட்டுப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நிலத்தின் பெயரில் ஏதேனும் மாற்றங்கள் நடக்கிறதா என்பதை உடனுக்குடன் கண்டறிய முடியும். மேலும், சொத்து ஆவணங்களுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் சொத்து தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் பதிவானால் உடனடியாகப் பதிவுத்துறை மூலம் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி (SMS) வந்துவிடும். இது மோசடிகளை ஆரம்பத்திலேயே தடுக்க உதவும் ஒரு சிறந்த கவசமாகும்.

தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு ஒருபுறம் இருந்தாலும், நிலத்தை நேரடியாகப் பராமரிப்பதும் முக்கியம். உங்கள் நிலத்தில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் அடங்கிய அறிவிப்புப் பலகையை (Board) வைப்பதும், சிறிய வேலி அமைப்பதும் 80% மோசடி முயற்சிகளைத் தடுத்துவிடும். உரிமையாளர் விழிப்புணர்வுடன் இருக்கிறார் என்பதை அத்துமீறுபவர்களுக்கு இது உணர்த்தும். ஒருவேளை உங்கள் நிலம் ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்யப்பட்டால், உடனடியாகப் பதிவுத்துறையின் மாவட்டப் பதிவாளரிடம் முறையிடலாம் அல்லது காவல் துறையில் புகார் அளிக்கலாம். விழிப்புணர்வு ஒன்றே உங்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே வழி.

Nanthini

Recent Posts

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

24 minutes ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

33 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

45 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

47 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

51 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

54 minutes ago