“தயவுசெய்து நாட்டின் கல்வி முறையை மாற்றுங்க”… உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்…!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவம் துபே (24) என்ற மாணவர் பி.டெக்., படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த சிவம் துபே, கடந்த வெள்ளிக்கிழமை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிவம் துபேவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் சிவம் துபேவின் அறையில் சோதனை செய்த பொழுது, அவர் கடைசியாக எழுதிய கடிதம் கிடைத்தது.

அதில், “இந்த கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருந்தால், நான் இறந்து விட்டேன் என்று அர்த்தம். தற்கொலை செய்து கொள்வது எனது சொந்த முடிவு. இதை நான் ஒரு வருடமாக திட்டமிட்டு வருகிறேன். எனது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள். இந்த நாடு சிறந்த நாடாக மாற வேண்டுமென்றால் முதலில் இந்த நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும். நான் 2 ஆண்டுகளாக வகுப்பறைக்கு செல்லவில்லை. எனது பெற்றோர் செலுத்திய கல்வி கட்டணத்தை, திருப்ப அவர்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, தங்கள் மகன் நீண்ட நாட்களாக வகுப்பறைக்கு வரவில்லை என்பதை கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என சிவன் துபேவின் பெற்றோர் குற்றம்சாட்சி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், சிவன் துபேவின் உடன்படித்த மாணவர்களுடன் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

BREAKING: “ஆண்டவன் மீது ஆணை” அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனா..!!

தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…

8 minutes ago

BIG BREAKING: “C.ஜோசப் விஜய் எனும் நான்” முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்… நாடே மகிழ்ச்சியில்..!!

தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…

18 minutes ago

மாறிய சீருடை… மலர்ந்தது புதிய ஆட்சி..! கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் முதல்வர் விஜய்… வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..1!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…

1 மணத்தியாலம் ago

BREAKING: விஜய் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ளார் நடிகை திரிஷா… அதிரும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…

1 மணத்தியாலம் ago

முறைத்துப் பார்த்த டிரைவர்.. உயிருக்கு பயந்து ஓடும் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்.. மலேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!!

மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக் காட்சி..! சிங்கக் கூண்டுக்குள் புடவை கட்டிய பெண்?.. பகீர் கிளப்பிய வீடியோ… பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…

2 மணத்தியாலங்கள் ago