2026 FIFA உலகக் கோப்பையின் குரூப் ‘பி’ பிரிவில் நடந்த லீக் போட்டியில், கத்தார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த கனடா, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இப்போட்டியில் கனடாவின் நட்சத்திர வீரர் ஜொனாதன் டேவிட் 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி படைத்த ஹாட்ரிக் சாதனையைச் சமன் செய்து அசத்தியுள்ளார்.
எனினும், போட்டியின் போது கத்தார் அணியினர் காட்டிய அக்ரசிவ் ஆட்டத்தால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் கனடாவின் தாஜோன் புக்கானனை ஆபத்தான முறையில் எதிர்கொண்ட கத்தாரின் ஹோமம் அகமதுவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பாதியில், கத்தாரின் அசிம் மாடிபோ செய்த மோசமான ஃபவுலால் கனடா மிட்பீல்டர் இஸ்மாயில் கோனேயின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு ஸ்ட்ரெச்சரில் வெளியேற்றப்பட்டார். இதனால் மாடிபோவுக்கும் ரெட் கார்டு காட்டப்பட, கத்தார் அணி 9 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
கத்தார் வீரர்களின் இத்தகைய கடுமையான ஆட்டத்தால் அதிருப்தியில் இருந்த கனடா வீரர்கள், ஆட்டம் முடிந்ததாக நடுவர் விசில் ஊதிய உடனே கத்தார் வீரர்களுடன் கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து, கனடா பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் மற்றும் கத்தார் பயிற்சியாளர் ஜூலன் லோபெடெகி ஆகியோரும் மைதானத்தில் இறங்கி ஒருவருக்கொருவர் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். கனடாவின் வரலாற்று வெற்றியைத் தாண்டி, போட்டிக்குப் பின் இரு அணி வீரர்களும் மோதிக்கொண்ட இந்த கசப்பான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…