மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (25) என்ற வாலிபர் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருடைய சலூனில் காஷ்மீர் பனேகா பாகிஸ்தான் என்ற பாகிஸ்தான் ஆதரவு பாடல் ஒன்று திடீரென ஒழித்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்துல் ரகுமானிடம் விசாரணை நடத்தின. அப்போது அவர் தெரியாமல் youtube இல் பாகிஸ்தான் ஆதரவு பாடலை போட்டதாக தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் ஏற்கனவே இது போன்ற பாடலை அவர் ஒளிபரப்பியதாகவும் தங்களது எச்சரிக்கையை மீறி மீண்டும் அவர் அதே செயலில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசத்திற்கு எதிரான பாடலை ஒளிபரப்பியதாக கூறி சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்துல் ரகுமானின் செயல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதையும் கடந்த காலங்களில் அவர் இதே போன்ற பாடல்களை பாடி உள்ளாரா என்பதையும் கண்டறிய போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…