மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (25) என்ற வாலிபர் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருடைய சலூனில் காஷ்மீர் பனேகா பாகிஸ்தான் என்ற பாகிஸ்தான் ஆதரவு பாடல் ஒன்று திடீரென ஒழித்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்துல் ரகுமானிடம் விசாரணை நடத்தின. அப்போது அவர் தெரியாமல் youtube இல் பாகிஸ்தான் ஆதரவு பாடலை போட்டதாக தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் ஏற்கனவே இது போன்ற பாடலை அவர் ஒளிபரப்பியதாகவும் தங்களது எச்சரிக்கையை மீறி மீண்டும் அவர் அதே செயலில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசத்திற்கு எதிரான பாடலை ஒளிபரப்பியதாக கூறி சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்துல் ரகுமானின் செயல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதையும் கடந்த காலங்களில் அவர் இதே போன்ற பாடல்களை பாடி உள்ளாரா என்பதையும் கண்டறிய போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…