குஜராத் மாநில அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென்று அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபாணி உட்பட 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இப்படியான நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒரே பயணி இருக்க எண் 11A இல் பயணித்த விஷ்வாஷ் குமார் ரமேஷ் (40) ஆவார். இதனிடையே தாய்லாந்து நடிகர் ரூங்சக் லோய்சுசக்(47), கடந்த 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தாய் ஏர்வேஸ் விமானம் TG261 விபத்துக்குள்ளான போது அவரும் அதே 11A இருக்கையில் அமர்ந்து உயிர் பிழைத்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இந்திய விமான விபத்தில் தப்பியவர் நான் அமர்ந்த அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தார் என்று அவர் பதிவிட்டுள்ள இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…
ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…
ஜான்சியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் நிரஞ்சன் என்பவர் பிஎஸ்எஃப் படையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ருச்சி படேல் என்பவருக்கும்…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள நவோதயா வித்யா நிகேதன் பள்ளியில் 16 வயதான ஜான்வி என்ற மாணவி பயின்று வந்தார்.…
டார்ஜிலிங்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது…