தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார். இதற்காக விஜய் திருச்சிக்கு வருகை தந்துள்ள நிலையில் மக்களின் கூட்ட நெரிசலுக்கு நடுவே மரக்கடை பகுதியை நோக்கி விஜயின் தேர்தல் பிரச்சார வாகனம் நகர்ந்து கொண்டிருக்கிறது. திருச்சியை முடித்துவிட்டு அரியலூர் மற்றும் பெரம்பலூரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் அடுத்த வாரம் சனிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அவுரி திடலில் பிரச்சாரம் செய்ய கட்சியினர் திட்டமிட்டுள்ள நிலையில் ஏற்கனவே திமுக கூட்டம் நடத்த முன்பதிவு செய்துள்ளதால் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்யும் நிலையில் காலை முதலே பல கிலோமீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…