#image_title
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC தேர்வு மூலம் திறமையான ஊழியர்களை அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றனர். மொத்தம் எட்டு வகையான குரூப் தேர்வுகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தேர்வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். அதில் ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஒவ்வொரு வருடமும் தேர்வுகளில் ஒரு சில மாற்றங்கள் நடக்கும். அது போல ஏற்கனவே குரூப் 2 குரூப் 4 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த TNPSC நிர்வாகம் தற்போது அடுத்த மாற்றத்தை குரூப் 1 தேர்வில் அறிவித்திருக்கிறது. குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான பாடத்திட்டத்தை TNPSC மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய பாதத்திட்டம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு பொது அறிவு பிரிவில் ஆறு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இருந்த பாடத்திட்டத்தில் ஒன்பது படங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று படங்கள் குறைக்கப்பட்டு ஆறு பாடல்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெறுவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய பொருளாதாரம் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் குறித்த பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும் எனவும் இந்திய ஆட்சியியல் பாடத்திலிருந்து 40 கேள்விகளும் தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு அரசியல் இயக்கங்கள் பாடத்திலிருந்து 40 கேள்விகளும் கேட்கப்படும் என்று TNPSC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் பொது அறிவு பிரிவில் மொத்தம் 175 கேள்விகள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக திறனறிவு மற்றும் மனக்கணக்கு முன்னறிவிப்பு பிரிவிலிருந்து மொத்தம் 27 கேள்விகள் கேட்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. வருடாந்திர அட்டவணையின் படி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரும். முதல் நிலை தேர்வு ஜூன் மாதத்தில் நடந்த TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…