அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் எடுத்துள்ள முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊராட்சியின் 5 மற்றும் 6-வது வார்டு பகுதிகளில் சாலை வசதி, சீரான குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் வடிகால் போன்ற அத்தியாவசிய தேவைகள் கடந்த 5 ஆண்டுகளாகப் பூர்த்தி செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தங்கள் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். “அடிப்படை வசதிகள் இல்லை என்றால் வாக்குகள் இல்லை” என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருப்பதால், தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்திப் பொதுமக்களைச் சமாதானப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…