தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதன்பிறகு அவர் இயக்கிய ஹவுஸ்ஃபுல், இவன், உள்ளே வெளியே போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பிறகு அவரை திருமணம் செய்துகொண்ட பார்த்திபன் 12 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்தார்.
பார்த்திபன் தன்னுடைய சினிமா பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமானப் படங்களாகக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
பார்த்திபன் இயக்குனர் ஆவதற்கு முன்னால் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவர் இயக்கிய தாவணி கனவுகள் படத்தில் ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தில் பார்த்திபனுக்கு அதிகமானக் காட்சிகள் சிவாஜி கணேசனுடன் இருப்பது போல அமைந்திருக்கும். சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவம் பற்றி அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அதில் “நானும் சிவாஜி சாரும் ஒரு எமோஷனலானக் காட்சியில் நடிக்க வேண்டும். நான் வசனம் பேசி முடித்ததும் அவர் ரத்த வாந்தி எடுப்பது போன்ற காட்சி. நான் சொதப்பிவிட்டால் மறுபடியும் அந்த காட்சியை மீண்டுமெடுப்பதில் சிரமம் இருக்கும். அதனால் சிவாஜி சார் என்னை அழைத்து “நீ ஒழுங்கா நடிச்சாதான் உங்க இயக்குனருக்கு நல்லது. ஏன்னா இந்த படத்தோட தயாரிப்பாளரும் அவர்தான். அதனால் ஒழுங்கா நடிக்கணும்” என மென்மையாக மிரட்டினார். ஆனால் எனக்கு நாடகத்தில் எல்லாம் நடித்த அனுபவம் இருந்ததால் நான் ஒரே டேக்கில் நீண்ட வசனத்தை பேசி நடித்தேன். அதைப் பார்த்து அவர் என்னைப் பாராட்டினார்” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…