மைதானத்தில் உயிருடன் எரிந்த பெண்… நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்… சென்னையையே அலறவிட்ட பயங்கர சம்பவம்…..!

Spread the love

சென்னை பள்ளிக்கரணை ராஜேஷ் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதுடைய நிவேதிதா. இவருக்கும் சதிஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான இரண்டு மாதங்களிலேயே நிவேதிதா தன் கணவரைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். சுமார் 8 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிவேதிதா, இந்தத் திருமண முறிவால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

நிவேதிதா ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளாக மன அழுத்தத்திற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவரது நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக மிகுந்த மனவேதனையில் இருந்த அவர், முறையாக மருந்துகளை உட்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான், நேற்று மாலை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

பெட்ரோல் பங்கிற்குச் சென்ற நிவேதிதா, தனது வண்டி பாதையிலேயே நின்றுவிட்டதாகக் கூறி பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். பின்னர் மயிலை பாலாஜி நகர் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள ஒரு காலி மைதானத்திற்குச் சென்று, யாரும் எதிர்பாராத விதமாகத் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த நிவேதிதாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட கால மன அழுத்தமும், குடும்பப் பிரச்சனையும் ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மனநலப் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு முறையான ஆலோசனையும் குடும்பத்தாரின் ஆதரவும் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அச்சோ.. செம ப்ரோபோசல்… மீட்புப் பணி என்று நினைத்த காதலிக்கு… இன்ப அதிர்ச்சி கொடுத்த நியூயார்க் தீயணைப்பு வீரர்…!!

நியூயார்க்கில் தீயணைப்பு வீரராகப் பயிற்சி பெற்று வரும் ஒரு நபர், தனது காதலிக்கு மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில்…

2 minutes ago

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டிய கணவன்… நள்ளிரவு 11 மணிக்கு வீட்டில் நடந்த பயங்கரம்… பதறவைக்கும் கொடூரக் கொலை…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (டிரைவர்). இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு…

6 minutes ago

மோடியின் மெகா ஸ்கெட்ச்… டெல்லிக்கு பறந்த அந்த சீக்ரெட் ரிப்போர்ட்… தூக்கத்தை இழந்த 10 அமைச்சர்கள்… பாஜகவில் அதிரடி திருப்பம்…!

மத்திய அமைச்சரவையை அதிரடியாக மாற்றிமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதன்படி, 10-க்கும் மேற்பட்ட…

13 minutes ago

திருமணமான 9-வது நாளே நேர்ந்த கொடூரம்… தேனிலவில் புதுப்பெண்ணுக்கு கணவன் செய்த காரியம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண்…

18 minutes ago

“மாதம் 1 லட்சம் சம்பளமா..? அது வெறும் 30 ஆயிரத்துக்குச் சமம்…!” நெட்டிசன்களை அலறவிட்ட பெண் CA-வின் பட்ஜெட்…!!

இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த புதிய விவாதத்தை குருகிராம் நகரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் முஸ்கான்…

18 minutes ago

அதிமுக காலி… மொத்தமாக அள்ளிய விஜய்… மாமல்லபுரத்தில் நாளை நடக்கப்போகும் நடுக்கடலோர அரசியல் திருப்பம்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை…

24 minutes ago