“நீ ரொம்ப குண்டா இருக்க எனக்கு அவமானமா இருக்கு”… மனைவிக்கு கணவன் கொடுத்த ‘ஸ்பெஷல் ஸ்வீட்’.. அடுத்த 10 நிமிடத்தில் நடந்த பயங்கரம்…!

Spread the love

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ப்ரொத்தத்தூர் பகுதியில் மனைவியின் உடல் எடையைக் காரணமாகக் காட்டி, கணவனே அவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதான கிரண் என்பவருக்கும், 25 வயதான பிரியங்கா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில், பிரியங்காவின் உணவுப் பழக்கவழக்கமும், அவரது 110 கிலோ உடல் எடையும் கிரணுக்குப் பிடிக்காமல் போனதால் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பிரியங்காவின் உடல் எடையைக் குறைக்க கிரண் பலமுறை வற்புறுத்தியும், அதில் எந்த மாற்றமும் ஏற்படாததால் ஆத்திரமடைந்த கிரண், தனது மனைவியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். கடந்த மே 3-ம் தேதி இரவு, பிரியங்காவுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளை வாங்கி வந்த கிரண், அதில் யாருக்கும் தெரியாமல் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். அந்த இனிப்பை ஆசையாகச் சாப்பிட்ட பிரியங்கா, சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி இறந்ததை உறுதி செய்த கிரண், எதுவும் தெரியாதது போல நடித்து இது ஒரு இயற்கை மரணம் என உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார். இருப்பினும், பிரியங்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடற்கூறாய்வு செய்தனர். அந்த அறிக்கையில், பிரியங்கா விஷம் உட்கொண்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கிரணிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தனது மனைவியின் அதிக உடல் எடை காரணமாகச் சமூகத்தில் தனக்கு அவமானம் ஏற்படுவதாகவும், எடையைக் குறைக்க அவர் ஒத்துழைக்காததாலும் இந்தக் கொடூரத்தைச் செய்ததாக கிரண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, மே 5-ம் தேதி கிரணைக் கைது செய்த ப்ரொத்தத்தூர் காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குடும்ப உறவுகளில் புரிதல் இல்லாதபோது ஏற்படும் இத்தகைய வன்முறைகள் மற்றும் ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்ற கணவனின் செயல் ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு… விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவுகளை உருவாக்க அதிரடி…

39 seconds ago

இன்னும் 50 ஆண்டுகளுக்கு விஜய் தான்… இளம் அமைச்சர் கீர்த்தனா அதிரடி..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியில், மிக இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, தமிழக அரசியல்…

5 minutes ago

200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்..? இதோ முழு விவரம்..!!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், தனது முதல் அரசாணையாக வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

11 minutes ago

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

46 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

1 மணத்தியாலம் ago