BREAKING: 24 மணி நேரம் தான் கெடு… அதற்குள் நீக்குங்க.. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

Spread the love

சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரம் கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலையோரங்களில் கைவிடப்பட்டு தூசி படிந்து கிடக்கும் இந்த வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சமூக விரோத செயல்களுக்கான இடமாகவும் அவை மாறிவருகின்றன. மேலும், மழைநீர் தேங்கி டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், இந்த வாகனங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், நோட்டீஸ் ஒட்டப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வாகனங்களை உரிமையாளர்கள் அகற்றாவிட்டால், அவை போலீசாரின் உதவியுடன் பறிமுதல் செய்யப்படும். கடந்த காலங்களில் உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை மீட்க 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டது; ஆனால், இந்த முறை எந்தவித கால அவகாசமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் எக்காரணம் கொண்டும் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், அவை அனைத்தும் பொது ஏலத்தில் விடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது.

Soundarya

Recent Posts

பிறந்து 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைக்க பேன் போட்ட தந்தை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…

8 minutes ago

“சட்டமன்றத்திற்குள் நுழைந்த ‘குட்டி TVK’.. பெண் MLA-க்கள் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கோட்டை”..!!

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…

8 minutes ago

FLASH: அரசு மருத்துவமனை நுழைவுவாயில் கான்கிரீட் இடிந்து விபத்தில் தாய், மகள் படுகாயம்… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…

18 minutes ago

“நான் முதல்வன் பெயர் மாற்றம்… மக்களுக்கு அந்த ஒரு பெயர்தான் ஞாபகம் வரும்… புதிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்…!!”

தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…

18 minutes ago

நான் காதலித்த முதல் நபர் யார் தெரியுமா..? அதை சொன்னா தமிழ்நாடே அதிரும்… புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை வனிதா… கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய…

21 minutes ago

பகீர்.. சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்… திருமண மண்டபமாக மாறும் தொழிற்சாலைக் கிணற்றில் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு…

28 minutes ago