தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் திருநங்கைகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், புதிய ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2,333 பயனாளிகள் பயனடைந்துள்ளனர், இதற்காக அரசு 23.33 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிச் செயல்படுத்தி வருகிறது.
இதேபோல், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப இணையம் சார்ந்த பணிகளில் (Gig workers) ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் இவர்களுக்கென பிரத்யேக ஓய்வூ கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தொழிலாளர்களின் பயணச் சுமையைக் குறைக்க புதிய மின்சார இருசக்கர வாகனங்கள் (e-Scooter) வாங்குவதற்கு 20,000 ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2,000 கிக் தொழிலாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, கல்வி, திருமணம், மகப்பேறு மற்றும் விபத்து மரணம் போன்றவற்றுக்கான நிதி உதவிகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்து காரணமாக உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீடு 5 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இது தொழிலாளர் குடும்பங்களுக்குப் பெரும் பாதுகாப்பை அளிக்கிறது.
தொழிலாளர்களின் நலனுக்காக கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 3,317 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, 50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி உயர்கல்வி பயிற்சி போன்ற எதிர்காலத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் அடித்தட்டு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களது வாழ்வியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…