பெங்களூரு நகரில் கட்டுப்பாடின்றி சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண கிரேட்டர் பெங்களூரு ஆணையம் புதிய வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, சாலைகளில் ஆங்காங்கே இலவசமாக வாகனங்களை நிறுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இதற்காக நகரத்தின் முக்கிய சாலைகள் ‘ஏ, பி, சி’ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, கார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முறையே ரூ.80, ரூ.60 மற்றும் ரூ.40 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்படும் கார்களுக்கு ஒன்றரை மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
வீட்டின் முன் சொந்தக் கார்களை நிறுத்துவதற்கும் இனி ஆண்டுதோறும் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும். அதன்படி சிறிய கார்களுக்கு ரூ.15,000, செடான் ரகக் கார்களுக்கு ரூ.20,000 மற்றும் எஸ்.யு.வி (SUV) கார்களுக்கு ரூ.25,000 என ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டின் முன் காரை நிறுத்தும் போது மற்ற வாகனங்கள் இடையூறின்றிச் செல்ல போதுமான இடவசதி உள்ளதா என்பதை ஜி.பி.ஏ. மார்ஷல்கள் நேரில் ஆய்வு செய்து சான்றளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பொது இடங்களுக்குப் பதிலாக வாகன நிறுத்த வளாகங்களை பயன்படுத்துவோருக்கு மாதக் கட்டணமாக கார்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், இரவு நேரங்களில் (இரவு 8:00 முதல் காலை 8:00 மணி வரை) வாகனங்களை நிறுத்துவோருக்கு மாதக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரில் காலியாக உள்ள நிலங்களை உரிமையாளர்களோ அல்லது பொதுமக்களோ வாகனப் நிறுத்துமிடங்களாக மாற்ற முன்வந்தால், அந்த நிலங்களுக்குப் பெறப்படும் சொத்து வரியிலிருந்து 35 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சீரான வாகன இயக்கத்தை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்; அவசியமான பரிசீலனைகளுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…