முருங்கைக்கீரை, ஏழை எளிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த மருந்தாகும். இதில் ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி-யும், தயிரை விட 2 மடங்கு அதிக புரதமும் நிறைந்துள்ளது. பொதுவாகக் கீரைகள் காய்ந்தால் சத்து குறைந்துவிடும் என்பார்கள்.
ஆனால் முருங்கையிலை மட்டும் காய்ந்த நிலையிலும் தனது முழுமையான ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் அதிசயத் தன்மை கொண்டது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இதனைத் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மிகச்சிறந்த பலனை அடைய முடியும்.
குழந்தைகளின் கண் பார்வைத் திறனை அதிகரிக்க முருங்கைச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பது நல்ல பலன் தரும். மேலும், முருங்கைச் சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் பருகி வந்தால் நரம்புத் தளர்ச்சி, இருமல் மற்றும் தோல் வியாதிகள் குணமாகும்.
விலங்குகள் கடித்தால் ஏற்படும் விஷத்தை முறிக்கவும், காயங்களை விரைவாக ஆற்றவும் முருங்கையிலையுடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்துப் பயன்படுத்தலாம். இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த “இயற்கையின் மல்டி வைட்டமின்” கீரையைத் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் நலத்திற்கு உகந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…