தங்கத்தைப்போலவே இனி வெள்ளி நகைகளுக்கும் தரம் சார்ந்த ‘ஹால்மார்க்’ முத்திரையைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அண்மைக்காலமாக வெள்ளியின் விலை மிக வேகமாக உயர்ந்து வருவதால், சந்தையில் போலி நகைகளின் நடமாட்டத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 7 ஆயிரம் டன் வரை வெள்ளி நுகரப்படும் நிலையில், நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க இந்தத் தரக்கட்டுப்பாட்டு முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 300 ரூபாயைத் தொடக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், நகைகள் மற்றும் கலைப்பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முன்பாக, நகை வியாபாரிகள் மற்றும் இத்துறை சார்ந்த வல்லுநர்களுடன் அரசு விரிவான ஆலோசனைகளை நடத்தவுள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு வெள்ளிப் பொருளிலும் அதன் தூய்மையை உறுதி செய்யும் ஹால்மார்க் அடையாளம் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது…
பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழக அரசியல் சூழல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும்…