தங்கத்தைப்போலவே இனி வெள்ளி நகைகளுக்கும் தரம் சார்ந்த ‘ஹால்மார்க்’ முத்திரையைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அண்மைக்காலமாக வெள்ளியின் விலை மிக வேகமாக உயர்ந்து வருவதால், சந்தையில் போலி நகைகளின் நடமாட்டத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 7 ஆயிரம் டன் வரை வெள்ளி நுகரப்படும் நிலையில், நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க இந்தத் தரக்கட்டுப்பாட்டு முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 300 ரூபாயைத் தொடக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், நகைகள் மற்றும் கலைப்பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முன்பாக, நகை வியாபாரிகள் மற்றும் இத்துறை சார்ந்த வல்லுநர்களுடன் அரசு விரிவான ஆலோசனைகளை நடத்தவுள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு வெள்ளிப் பொருளிலும் அதன் தூய்மையை உறுதி செய்யும் ஹால்மார்க் அடையாளம் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு…
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…