திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், வெறும் ஆசைக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், உண்மையாக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கம் வரும்போது மட்டுமே அரசியலில் கால் பதிப்பேன் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், ஆரம்பகாலத்தில் இருந்து முதலமைச்சர் விஜய்யின் திரைப்படங்களுக்காக போஸ்டர் ஒட்டியவர்கள், நற்பணி மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்தவர்கள், கட்சி தொடங்கிய பிறகு அவருக்காக இரவு பகலாகப் பாடுபட்டவர்கள் ஆகியோருக்கே தவெகவில் போட்டியிடுவதற்கான முன்னுரிமையும் தகுதியும் உள்ளது என்றும், அவர்களே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் லாரன்ஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…