ஒரே ஒரு கார்டு போதும்… டிக்கெட் தேவையில்லை… சென்னைவாசிகளின் பயணத்தை எளிதாக்க வந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு…

Spread the love

சென்னையை வந்தாரை வாழவைக்கும் ஊர் என்று கூறுவார்கள். அப்படி தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்ட மக்கள் அனைவரும் சென்னையில் தான் வேலைக்காக குடியேறி இருக்கிறார்கள். சென்னையில் தினமும் நடக்கக்கூடிய பொதுவான பிரச்சினை கூட்ட நெரிசல். வேலைக்கு செல்வோர், படிப்புக்காக சொல்வோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அது பேருந்து என்றாலும் சரி ரயில் அல்லது மெட்ரோ ரயில் ஆனாலும் சரி கூட்ட நெரிசலில் டிக்கெட் எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம். அதற்கு முடிவு கட்ட தான் வந்திருக்கிறது “சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு” . இது என்ன இதனால் என்ன பயன் என்பதை பற்றி இனி காண்போம்.

மெட்ரோ ரயில்கள், எம்டிசி பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு ஏற்கும் பிற பிளாட்பார்ம்களிலும் பயணிகள் போக்குவரத்து சேவைகளை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கு ஏதுவான சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை போக்குவரத்து துறை அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். இது பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

முன்னதாக இந்த சிங்காரச் சென்னை பயண அட்டை முதற்கட்டமாக மெட்ரோ ரயிலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்துகளிலும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு இருந்தால் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர், அவசரமாக அலுவலகங்களுக்கு செல்வோர் என அனைவருக்கும் இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.

மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்து பயணிப்பது இனி மிகவும் எளிது. பேருந்துகளில் நடத்துனர்களிடம் இந்த ஸ்கேன் செய்யும் கருவி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று வகையான போக்குவரத்துகளிலும் மக்கள் இந்த ஒரே கார்டை பயன்படுத்தி பயணித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட தொகையை கொடுத்து இந்த கார்டை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் இந்த சேவையை மக்கள் ஸ்கேன் செய்வது மூலம் டிக்கெட் எடுக்காமல் ஃப்ரீயாக தினமும் நீங்கள் பயணிக்க முடியும். சென்னை நகரத்து மக்கள் இந்த கார்டுக்கு வெகுவாக வரவேற்பு அளித்து இருக்கிறார்கள்.

admin

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

11 minutes ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

13 minutes ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

35 minutes ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

40 minutes ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

53 minutes ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

59 minutes ago