தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் முறை அமலில் உள்ளது. இந்த விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புதிய உட்பிரிவு எண் உருவாக்க வேண்டிய தேவை இருப்பின் நில அளவையர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே அனுப்பப்பட்டு வந்தன. எனினும், நில அளவையர்கள் நிலத்தை அளந்த பிறகு கள ஆய்வு அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிப்பு போன்ற பணிகளைக் கையால் எழுதும் ‘மேனுவல்’ முறையில் காகித ஆவணங்களாகவே செய்து வந்தனர்.
இந்த இரட்டை வேலை மற்றும் மேனுவல் நடைமுறையால் பட்டா மாறுதல் பணிகளில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, நிலத்தை அளந்து குறிப்புகள் எழுதுதல் மற்றும் வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேனுவல் முறையில் மேற்கொள்வதை முற்றிலும் நிறுத்த நில அளவைத்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பப் பதிவு முதல் புதிய பட்டா மற்றும் நில அளவை வரைபடம் உருவாக்கம் வரை அனைத்துப் பணிகளும் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த புதிய உத்தரவின்படி, நில அளவையர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றத்தால், பொதுமக்கள் தங்களது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் உத்தரவை விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடவடிக்கை பட்டா மாறுதலில் நிலவி வந்த காலதாமதத்திற்கும், முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நுகர்வோரின் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றிச் செயல்படும் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்…
நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…
கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…
மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…
மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…