இமாச்சலப் பிரதேச மாநிலம் சாம்பா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிகிக்கொண்ட பைக் ஓட்டுநர் ஒருவரைப் புதுமணப் பெண் ஒருவர் தனது துப்பட்டாவைப் பயன்படுத்திச் சாதுர்யமாக மீட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தின் அதிவேக நீரோட்டத்தில் நிலைதடுமாறி பைக் ஓட்டுநர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவ்வழியாகக் காரில் வந்த ஒரு குடும்பத்தினர் நிலமையைக் கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி உதவ முன்வந்தனர். காரில் இருந்த நபர் வெள்ளத்தில் இறங்கி உதவ முயன்றபோதும் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் நெருங்க முடியவில்லை.
அப்போது காரில் இருந்த புதுமணப் பெண், சிறிதும் யோசிக்காமல் தனது துப்பட்டாவை நீட்டி ஓட்டுநரைப் பிடிக்குமாறு கூறியுள்ளார். அந்தத் துப்பட்டாவைப் பலமாகப் பிடித்துக்கொண்ட ஓட்டுநரை, காரில் வந்த நபரும் சேர்ந்து பாதுகாப்பாகக் கரையேற்றினர். புதுமணப் பெண்ணின் இந்த தைரியமான மற்றும் சமயோசிதமான நடவடிக்கையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியைச் சேர்ந்தவர் பாலக் (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது…
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு…
2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேசிய அரசியல் நகர்வுகள், இந்திய அரசியலில்…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…