மத்திய அரசு உருவாக்கியுள்ள 4 தொழிலாளர் நலச் சட்டங்கள் நேற்று அமலுக்கு வந்தன. தற்போது உள்ள பணி சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டு ஊதிய சட்டம் (2019), தொழில் உறவுகள் சட்டம் (2020), சமூக பாதுகாப்பு சட்டம் (2020), பணியிட பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம் (2020) ஆகிய நான்கு சட்ட தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சலுகைகள் (சமூக பாதுகாப்பு, சம்பளத்துடன் விடுப்பு, ஓராண்ட்டுக்குப் பிறகு graturity), Gig, platform பணியாளர்களுக்கு அங்கீகாரம். அனைத்து பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு. எந்த துறையாக இருந்தாலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம். அனைவருக்கும் இலவசமாக ஹெல்த் செக்கப். பாதுகாப்பு மற்றும் ஒப்புதல் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் இரவு பணி செய்ய அனுமதி. ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்.
ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பலத்த பாதுகாப்பு. அனைத்து தொழிலாளர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வழங்குவது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான துறைகளில் பணி நேரம் 8 முதல் 12 மணி நேரம் வரை வாரத்திற்கு 48 மணி நேரம் மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் நேரம் அதாவது ஓவர் டைம் வேலை செய்தால் இருமடங்கு சம்பளம். தேவையான சூழலில் தொழிலாளர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவது கட்டாயம். ஊதியம் மற்றும் பணி நேரம் உள்ளிட்ட விதிகள் இனி டிஜிட்டல் மற்றும் ஊடக பணியாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…