ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கின் ஹாக்னி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனர் சுராஜ் சப்னா என்ற 23 வயது பெண்ணை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அதையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இதனால் வரையில் இவர்கள் தங்களுடைய சொந்த கிராமத்தை விட்டு விலகி வேறு ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் மீண்டும் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பி உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சப்னாவின் சகோதரர் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் தம்பதியின் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள்.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய நேரத்தில் சூரஜ் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பிள்ளார். அங்கிருந்து தப்பிய கும்பல் அன்றைய இரவே சூரஜையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவரை வழிமறிக்க தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று அங்கு வந்த குற்றவாளிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய தாக்குதலில் நான்கு குற்றவாளிகளும் காயம் அடைந்தனர். பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…