லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் லியோ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒரு வாரம் வரை பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆனது.
லியோ படம் பொன்னியின் செல்வன், ஜெய்லர் உள்ளிட்ட படங்களின் சாதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் ட்ரெய்டிலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியான லியோ படம் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
முன்னதாக லியோ படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் செல்போன் மூலம் லலித்தைத் தொடர்பு கொண்டு படம் சூப்பராக உள்ளது என வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தில் ப்ரொடக்ஷன் வேல்யூ அதிகமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் லியோ படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
இதனை பார்த்து ரசிகர்கள் மாரி செல்வராஜின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது லியோ படத்தில் பன்றிகளை வளர்க்கும் மிஸ்கின் தான் கொலை, கொள்ளைகளை செய்யும் ஆளாகவும் இருப்பார். அப்படி இருக்க மாமன்னன் படத்தில் பன்றிகளை வைத்து கதைக்களத்தை உருவாக்கிய மாரி செல்வராஜ் எப்படி லியோ படத்தை பாராட்டலாம் என ரசிகர்கள் கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…