விருதுநகர் மாவட்டம் அரும்புக்கோட்டையில் சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றிய போது , “நெல்லையில் வருகின்ற 17ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டிற்கு, அரும்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆயிரம் தொண்டர்களை திரட்டி வரவேண்டும். மண்டல பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்தந்த பாகம் எண் மற்றும் வாக்காளர் விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான். வரும் காலங்களில் பாஜக தொண்டர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் உரிய மரியாதை கிடைக்க உறுதுணையாக இருப்பேன். எங்களது மனதில் இடம்பெறும் வகையில் உங்களது பணி இருக்க வேண்டும்”என்று உரையாற்றினார் .
இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து கூட்டணி கட்சியினர் ஒன்று கூடி கலந்துரையாடி முடிவெடுப்போம். ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகிச் சென்று விட்டதை பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.
சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், "கையில் பூத் சிலிப் (Booth Slip) இல்லையென்றால்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…
கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…