விருதுநகர் மாவட்டம் அரும்புக்கோட்டையில் சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றிய போது , “நெல்லையில் வருகின்ற 17ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டிற்கு, அரும்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆயிரம் தொண்டர்களை திரட்டி வரவேண்டும். மண்டல பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்தந்த பாகம் எண் மற்றும் வாக்காளர் விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான். வரும் காலங்களில் பாஜக தொண்டர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் உரிய மரியாதை கிடைக்க உறுதுணையாக இருப்பேன். எங்களது மனதில் இடம்பெறும் வகையில் உங்களது பணி இருக்க வேண்டும்”என்று உரையாற்றினார் .
இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து கூட்டணி கட்சியினர் ஒன்று கூடி கலந்துரையாடி முடிவெடுப்போம். ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகிச் சென்று விட்டதை பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…