அழகான முடியை எடுத்து மொட்டை தலையுடன் நடிகை சீதா வெளியிட்ட வீடியோ… ஷாக்காகும் ரசிகர்கள்.. இதுதான் காரணமா…?

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் சீதா. 1985 ஆம் ஆண்டு கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பார்த்திபனுடன் புதியபாதை உட்பட பல வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார். சீதா தன்னுடைய நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற புகழுக்குரியவர். இவர் பார்த்திபனுடன் இணைந்து புதிய பாதை திரைப்படத்தில் நடித்த பிறகு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும் ராக்கி என்ற ஒரு மகனும் உள்ளனர். சீதா மற்றும் பார்த்திபன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் சில வருடங்களில் இவர்களுடைய காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இருவரும் பிரிந்து விட்டாலும் தங்களுடைய பிள்ளைகளுக்காக அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு சீதா சினிமாவை விட்டு விலகி இருந்தார். சில வருடங்களில் விவாகரத்து ஆனதும் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். பிறகு சீரியல் மற்றும் சினிமா என்று நடித்துக் கொண்டிருந்த சீதாவுக்கு சீரியல் நடிகர் ஒருவருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்துவிட்ட நிலையில் சீதா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் சினிமாக்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் சீதா தன்னுடைய சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்யும் வீடியோக்களை அவர் பகிர்வது வழக்கம். தனது youtube சேனலில் பல சமையல் வீடியோக்களையும் இவர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்.

அப்படி தன்னுடைய youtube சேனலில் சீதா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதாவது சீதாவிற்கு சுருள் சுருளாக தலைமுடி நீண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் தலையை மொட்டை அடித்து உள்ளார். அதற்காக என்ன காரணம் என்று அவர் சொல்லவில்லை என்றாலும் அவருடைய அம்மாவின் இறப்புக்கு பிறகு அவர் சோகமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவருடைய லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

இந்தத் தேர்தல் ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..? ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அதிரடி வேண்டுகோள்…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…

33 seconds ago

தமிழ்நாட்டின் முதல் ஓட்டு..! காலை 6.45 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…

39 minutes ago

குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்ட நடிகர் கென் கருணாஸ்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…

48 minutes ago

காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…

51 minutes ago

“ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு விஜய் சொன்ன அந்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

55 minutes ago

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

1 மணத்தியாலம் ago