தமிழக அரசு பெண்களுக்காக “விடியல் பயணம்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சில மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர்க்கு இலவசம் என்று போர்டு போட்ட பேருந்தில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு ஆண்களுக்கான டிக்கெட்டை கொடுக்கின்றனர், என்று சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் டிக்கெட்டை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார் . அதில் திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் இரண்டு நபருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த பதிவினை பலரும் பகிர்ந்து தமிழக அரசை விமர்சனமும் செய்துள்ளனர்.
இதன் தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், புகைப்படத்தில் இருப்பது பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தின் இயங்கும் பேருந்து இல்லை(பிங்க் நிறம் ), இது பி.எஸ்.-4 புறநகர் பேருந்து (நீல நிறம்). இதில் மகளிருக்கு பயணம் கட்டணம் உண்டு. பேருந்து நடத்துனர் மின்னணு பயணச் சீட்டில் பெண் என வருவதற்கு பதிலாக தவறாக ஆண் எனக் குறிப்பிட்டு பயணச்சீட்டை வழங்கியுள்ளார். தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…
கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…
டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…