அரசு பேருந்தில் மகளிருக்கு கட்டணம் வசூல்… வெளியான ஆதாரம்… தமிழக அரசு கொடுத்த திடீர் விளக்கம்..!

By Srimathi on ஆவணி 5, 2025

Spread the love

தமிழக அரசு பெண்களுக்காக “விடியல் பயணம்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சில மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர்க்கு இலவசம் என்று போர்டு போட்ட பேருந்தில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு ஆண்களுக்கான டிக்கெட்டை கொடுக்கின்றனர், என்று சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் டிக்கெட்டை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார் . அதில் திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் இரண்டு நபருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த பதிவினை பலரும் பகிர்ந்து தமிழக அரசை விமர்சனமும் செய்துள்ளனர்.

இதன் தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், புகைப்படத்தில் இருப்பது பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தின் இயங்கும் பேருந்து இல்லை(பிங்க் நிறம் ), இது பி.எஸ்.-4 புறநகர் பேருந்து (நீல நிறம்). இதில் மகளிருக்கு பயணம் கட்டணம் உண்டு. பேருந்து நடத்துனர் மின்னணு பயணச் சீட்டில் பெண் என வருவதற்கு பதிலாக தவறாக ஆண் எனக் குறிப்பிட்டு பயணச்சீட்டை வழங்கியுள்ளார். தவறான  தகவல்களை  பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .