Categories: சினிமா

‘நிலா அது வானத்து மேலே’ பாடல்.. அடம் பிடித்த இளையராஜா.. பாடல் உருவானது குறித்து மனம் திறந்த ஜனகராஜ்..!

Spread the love

80து மற்றும் 90 கால கட்டங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஜனகராஜ் அவர்கள். நிலா அது வானத்து மேலே என்ற பாடல் உருவான விதம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990 காலகட்டத்தில் எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதனை தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் சிறப்பாக நடிப்பவர் ஜனகராஜ்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 96 என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் ஜனகராஜ் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு போனனர். இவர் சமீபத்தில் பேட்டியில் நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிலா அது வானத்து மேலே என்ற பாடல் குறித்து பேசி இருந்தார். நாயகன் இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட ஒரு திரைப்படம்.

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில், பாலகுமாரன் வசனத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்திலிருந்து மும்பை சென்று மிகப்பெரிய தாதாவாக மாறிய வரதராஜ் என்பவரின் வரலாற்றின் அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதில் பரிந்துரைக்கப்பட்டு மூன்று தேசிய விருதுகளை வென்றது.

நாயகன் படத்தின் பின்னணி இசையே படத்தை வேறு கோணத்தில் எடுத்து சென்றிருக்கும். ஒவ்வொரு இசையும் புல்லரிக்க வைக்கும் வகையில் இருந்திருக்கும். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் படம் முழுவதும் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருப்பார். கமலஹாசன் சக்திவேலாக இருந்து வேலு நாயகராக மாறும்போது கமலுடன் உறுதுணையாக இருந்திருப்பார்.

இவருக்காக ஒரு பாடல் இப்படத்தில் எடுக்கப்பட்டது. அதுதான் நிலா அது வானத்து மேலே.. இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடலுக்கு வரிகளை எழுதியவர் இளையராஜா தான். கடலில் படகு செல்லும் லொகேஷனும், ஜனகராஜனின் நடிப்பும், குயிலியின் மீனவர் பெண் நடனமும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இருந்திருந்தது.

இப்பாடலில் முதலில் வரும் வரியான நிலா அது வானத்து மேலே வரிக்குப் பிறகு பலானது ஓடத்து மேலே என்ற வரியில் பலானது என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது. சென்னை வட்டார வழக்கில் பலானது என்ற வார்த்தை அடிக்கடி குறிப்பிடுவதால் இந்த வார்த்தையை இளையராஜா பயன்படுத்தி இருந்தார். இதற்கு பதிலாக வேறு வார்த்தையை போட்டு பார்த்தார்கள்.

ஆனால் எதுவுமே இளையராஜாவுக்கு திருப்தியை கொடுக்காததால் பலானது ஓடத்து மேலே என்ற வரியை போட்டே ஆக வேண்டும் அடம்பிடித்து அந்த வரியை சேர்த்து இருந்தாராம் இளையராஜா. ஜனகராஜ் அவர்களுக்கு இந்த பாடல் பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. இந்த சுவாரசிய சம்பவத்தை அவர் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Mahalakshmi

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

6 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

6 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

6 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

6 மணத்தியாலங்கள் ago