இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளுமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைந்த காலம் போய் தற்போது இருந்த இடத்திலிருந்து கொண்டே எளிதில் வேலையை முடிக்கும் வகையில் ஆன்லைனில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. அதன்படி தற்போது தமிழகத்தில் ஆண்டுதோறும் 36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதில் 5.5 லட்சம் உரிமை பத்திர வைப்பு எனப்படும் கடனுக்கான பிணையம் மற்றும் 3.5 லட்சம் ரசீது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் சொத்துக்கள் ஆன்லைன் மூலம் பதியும் வகையில் தமிழக பதிவுத்துறை புதிய நடவடிக்கையை கொண்டு வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வீட்டிலிருந்தபடியே பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்டார் 3.0 என்ற திட்டம் மூலம் சொத்துக்களை வாங்குவது, விற்பது மற்றும் திருமண பதிவு உள்ளிட்ட பணிகளை வெறும் பத்து நிமிடங்களில் வீட்டிலிருந்து செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கான பிரத்தியேக சாஃப்ட்வேரில் விவரங்களை பதிவு செய்து பத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…