“முருகன் ஆர்எஸ்எஸ் டவுசர் அணியமாட்டார்”…. மதுக்கூர் ராமலிங்கத்தின் அதிரடி பேச்சால் அரண்டுபோன பாஜக….!

Spread the love

பல்லாவரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பாஜக மற்றும் அதன் சித்தாந்தங்களை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இந்தியா அடிபணிந்து போவதாகவும், இதன் காரணமாகவே ஈரான் போன்ற நட்பு நாடுகளுடனான உறவு பாதிக்கப்பட்டு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்கு மறைமுக ஆதரவு அளிப்பது போல் உள்ளதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆன்மீகத்தை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துவதை விமர்சித்த மதுக்கூர் ராமலிங்கம், “குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் போன்ற இடங்களைத் தேடி வருவதாகக் கிண்டல் செய்தார். ராமர் மற்றும் ஐயப்பன் பெயரால் அரசியல் செய்தவர்கள் இப்போது முருகனைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பதாகக் கூறிய அவர், “முருகன் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் காக்கி அரை டவுசரை அணிய மாட்டார், அவர் ஆண்டியாகக் கோவணத்தோடு தான் நிற்பாரே தவிர இவர்களது சித்தாந்தத்திற்குள் சிக்கமாட்டார்” என்று அதிரடியாகப் பேசினார்.

அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரையும் அவர் விட்டுவைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவின் கட்டளைக்கு இணங்கி பெரியார் படத்தையே மேடையிலிருந்து அகற்றியது அவர்களின் அடிமைத்தனத்தைக் காட்டுவதாகச் சாடினார். பாஜக எனும் கரடியிடம் அதிமுக எக்குதப்பாக மாட்டிக்கொண்டுள்ளது என்றும், தவெக தலைவர் விஜய் பாஜகவைச் சித்தாந்த எதிரி என்று கூறிவிட்டு அவர்களைப் பற்றிப் பேசத் தயங்குவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

இறுதியாக, தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பது இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் ஒரு முக்கிய களம் என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் வஞ்சக வலையில் விழுந்துள்ள அதிமுக கூட்டணியை மக்கள் முற்றிலுமாக வீழ்த்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச அரசியல் மாற்றங்கள் முதல் உள்ளூர் அரசியல் நகர்வுகள் வரை அவர் முன்வைத்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago