கர்நாடக மாநிலச் சேர்ந்தவர் அஸ்வினி ஹலகட்டி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த இவர் நான்காவது முறையாக கர்ப்பம் ஆகி உள்ளார். இதனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அவருக்கு கடந்த 23ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது .இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மறுநாள் குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் நேற்று காலை அஸ்வினியின் தாய் பச்சிளம் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.
நான்காவது பெண் குழந்தை பிறந்து விட்டது என்று வேதனையிலிருந்து அஸ்வினி தான் பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தார் . அஸ்வினியின் தாய் கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பியதும் குழந்தை மூச்சு விடவில்லை என்று கூறி அழுது நாடகம் ஆடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்றும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் அஸ்வினியை போலீசார் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…