நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலத்திற்குத் தள்ளிப்போடுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கை நகை சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, திருமணங்கள் உள்ளிட்ட விசேஷங்களுக்குத் தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் இந்தத் திடீர் வேண்டுகோள் காரணமாக, திங்கட்கிழமை பங்குச்சந்தை தொடங்கியவுடன் முன்னணி நகை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 6.4 சதவீதமும், கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 8.3 சதவீதமும் சரிந்தன. மேலும், சென்கோ கோல்டு மற்றும் ஸ்கை கோல்டு போன்ற நிறுவனங்களின் பங்குகள் 10 முதல் 12 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த தங்கமயில் ஜூவல்லரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் 6 சதவீதம் வரை சரிவைக் கண்டன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் இத்தகைய கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி விளக்கியுள்ளார். இந்த அறிவிப்பால் நகை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…
தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…
பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், கசூர் அருகே உள்ள கண்டா சிங் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு, தான் மிக…
நொய்டாவில் உள்ள பீட்சா கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் எச்சில் துப்பும் வீடியோ சமூக…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில்…
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை முடித்துவிட்டு கணவருடன் ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த 29 வயது பெண் மர்மமான முறையில் காணாமல் போன…