தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில், 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த 17 எம்.எல்.ஏ-க்களும் இன்று சட்டப்பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
அதேசமயம், மீதமுள்ள 30 எம்.எல்.ஏ-க்கள் எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தத் தீவிரமாக மனு அளித்துள்ளது. சட்டப்பேரவை கூடும் முதல் நாளிலேயே அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும்…
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி,…
மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…
தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…