தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, எ.வ. வேலு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
அரசியல் களத்தில் இருவேறு துருவங்களாகச் செயல்பட்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் காட்டிய இந்தப் பரஸ்பர மரியாதை அரசியல் வட்டாரங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கசப்புகளை மறந்து, ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் விதமாக அமைந்துள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்தச் சந்திப்பு, பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும்…
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி,…
மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…
பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், கசூர் அருகே உள்ள கண்டா சிங் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு, தான் மிக…