தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, தமிழக அரசு சார்பில் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், அஜித் குமாரின் ரசிகர்களும் இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. அன்னாரது இறுதிச் சடங்குகள் நாளை (மே 31) காலை பாலவாக்கத்தில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை சுப்ரமணியம் காலமான நிலையில், தற்போது தாயாரையும் இழந்து தவிக்கும் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பலரும் தங்களது ஆறுதல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…