தமிழக அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுகளைக் கண்காணித்து சுட்டிக்காட்ட நேற்றுதான் சிறப்பு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவமனை பிணவறை ஊழியர்கள் சிலர் அங்கு கஞ்சா புகைப்பதாக நேற்று ரகசியத் தகவல் வெளியான நிலையில், இன்று அதே பிணவறைப் பகுதியைக் குறிவைத்து போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இதில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் 50 நைட்ரோசெபாம் போதை மாத்திரைகளை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மூன்று பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நோயாளிகளைக் குணப்படுத்தும் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, அதுவும் பிணவறையின் அருகிலேயே இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருட்கள் பிடிபட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும் மருத்துவ வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…