#image_title
80,90’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது படங்கள் வெள்ளிவிழா கண்டது. சிறந்த நடிகருக்கான பல விருதுகளையும் தன்வசப்படுத்தியவர் மைக் மோகன்.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா திரைப்படத்தின் மூலம் மைக் மோகன் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் மைக் மோகன் வில்லனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் மைக் மோகன் அளித்த பேட்டியில் தொகுப்பாளர் மூடுபனி நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட படங்களில் உங்களுக்கு குரல் கொடுத்தது சுரேந்தர் தானா? இதுவரை மோகனுடைய வாய்ஸ் சுரேந்தர் உடைய வாய்சாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். அதற்கு மோகன் இதுக்கு முன்னாடி மக்கள் என் குரலைக் கேட்டு இருக்காங்க. கலைஞர் ஐயா சொல்லி பாசப்பறவைகள் நான்தான் பேசி அந்த படம் ஓடி இருக்கு. அது வேற.
ஆனா மூடுபனில நண்பர் எஸ்வி சங்கர் பேசினார். நான் பெங்களூரில் இருந்து வந்ததால் சில வார்த்தைகள் வேற மாதிரி இருக்கும். உதாரணத்திற்கு பெங்களூரில் அப்படியான்னு சொல்ல மாட்டோம். ஆமாவா என்று கேட்போம். இந்த மாதிரி ஒரு சில விஷயங்கள் மாறுபடும். தயாரிப்பாளர், இயக்குனர்கள் சொல்லல நானும் என்னு கேட்டு மெனக்கிடல. என் சைடு ஒரு தவறு இருக்கு. நான் இப்படி ஆக்ட் பண்ணுவேன்னு சொல்லி கேட்கல என பேசியுள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…
சோனிபட் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஆறு வயது சிறுமி, அருகே உள்ள நீர் தொட்டியில் சடலமாக…
டி நகர் வாணி மகால் மேம்பாலம் அருகே ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியரான கார்த்திகேயன் என்பவரிடமிருந்து ரூ 11 லட்சம்…
ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…