#image_title
தமிழ் சினிமாவில் தற்போது லைகா ப்ரொடக்ஷனுக்கு சமமாக 700 முதல் 800 கோடி வரையிலான படங்களை தயாரிக்கின்றது பேஷன் ஸ்டுடியோ நிறுவனம். இது தொடர்பான தகவல் தான் தற்போது சினிமாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அனைத்தையும் பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களை பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருவது வழக்கம். தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைக்கா நிறுவனம் தான். இந்த நிறுவனம்தான் ஆண்டுக்கு பல படங்களை தயாரிக்கும் .
ஆனால் இப்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது. தொடர்ந்து இவர்கள் தயாரித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் பொருளாதார சிக்கலில் மாட்டி தவித்து வருகின்றது. இந்தியன் 2 திரைப்படத்தின் வருமானத்தை எதிர்பார்த்து லைக்கா நிறுவனம் காத்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் லைக்கா நிறுவனத்தை தாண்டி ஏஜிஎஸ் சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றது.
இருந்தாலும் லைக்கா நிறுவனத்தை போன்றே மற்றொரு பெரிய நிறுவனமும் பெரிய பெரிய படங்களை தயாரித்து வருகின்றது. அதுதான் ஃபேஷன் ஸ்டூடியோ நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஓனர் சுதன். இவர் தமிழ் சினிமாவின் தற்போது ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்து வருகின்றார். இதன் லிஸ்ட் மட்டும் நீண்டு கொண்டே இருக்கின்றது. அதன் மொத்த மதிப்பு மற்றும் 700 ல் இருந்து 800 கோடி வரை இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு படம், அதைத்தொடர்ந்து கவினை வைத்து இரண்டு திரைப்படம் , நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம், ஹரிஷ் கல்யாணி வைத்து ஒரு படம், சந்திப் கிஷன் வைத்து ஒரு படம், மேலும் கீர்த்தி சுரேஷ் வைத்து ரிவால்வோ ரீட்டா என்ற திரைப்படத்தையும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனம்தான் தயாரிக்கின்றன.
அது மட்டுமா நயன்தாராவை வைத்து ஒரு திரைப்படம், ஜெயம் ரவி வைத்து ஒரு திரைப்படம் என்று ஒரு மிகப்பெரிய லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கின்றது. இதைப் பார்த்த பலரும் இந்த வருடம் வெளியாகும் பல திரைப்படங்களில் முக்காவாசி பேஷன் ஸ்டுடியோ நிறுவனத்தின் படங்களாகவே இருக்கும் என்று கூறி வருகிறார்கள். பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்களை இயக்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது ஃபேஷன்சன் ஸ்டுடியோ நிறுவனம்
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…